புதுக்கோட்டை எழுத்தாளர் -202
மணல்மேல்குடி, கவி.வெண்ணிலவன். இயற்பெயர் - பா.வெற்றிவேல். ஊர் - மணமேல்குடி. இவரது சித்தி மகள் தங்கையின் பெயர் வெண்ணிலா. தங்கை அவரது மீது காட்டிய அன்பு, பாசத்தின் பேரால் தனது பெயரை வெண்ணிலவன் என்று மாற்றிக்கொண்டார். வெண்ணிலாவின் தோழி கவிதா இவரது மீது பாசம் காட்டியதால் வெண்ணிலவன் எனும் புனைப் பெயருக்கும் முன் கவி சேர்த்துக்கொண்டு மணமேல்குடி கவி. வெண்ணிலவன் எனும் புனைபெயரில் எழுதி வருகிறார். சிறுகதையாசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர். சிறுகதை, கவிதை, வானொலி நாடகங்கள் என 127 படைப்புகள் எழுதியுள்ளார். மணமேல்குடி ஸ்ரீ ஜெகதீஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர். உலகத் திருக்குறள் பேரவையின் மணமேல்குடி கிளைத் தலைவர்.வெற்றி வெளிச்சம், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. ஆண்டு -2005. வேமன் பதிப்பகம். ஆசியுரை பொன்னம்பல அடிகளார். வெற்றி வெளிச்சம் எனும் தலைப்பிட்ட சிறுகதை அய்யனார் கோவிலில் மீது ஊர் கொண்டுள்ள பக்தியைக் காதல் கொண்டு பேசுகிறது. வைதேகி, ராஜேஷ் இருவரும் ஒரே ஊரைச் சார்ந்த மாற்றுச் சமூகத்தவர். இருவரும் காதலிக்கிறார்கள். அவ்வூர் அய்யனார் பூசாரி சாமிவந்து ஆடி, " என் பொண்ணு வேற சாதிப் பையனை விரும்புறா. அந்தப் பையனுக்கு என் பொண்ணக் கட்டிக் கொடுக்கலாமா....?. அந்தப் பையனை இந்தப் பொண்ணு கட்டிக்கக் கூடாது. அப்படிக் கட்டிக்கிட்டா உன் வம்சமே அழிஞ்சிபோயிடும் " என்று சொல்கிறார்.
சாமிக்குப் பயந்து வைதேகி ராஜேஷ் அவளது காதல் உறவை முறித்துக்கொள்கிறாள். மூடநம்பிக்கை இருட்டில் கிடக்கிறதே இந்தக் கிராமம் என்ற அவனது மனதில் மின்னலாய் வெளிச்சம் போட்டு, உண்மையை அழுத்தம் திருத்தமாய்க் கூறிவிட்டு நடந்து போன அவளையே மலைப்புடன் பார்த்துக்கொண்டு நின்றான் ராஜேஷ்.
இது புது வெளிச்சமா? இல்லை, மண்ணின் மான்பைக் காக்கும் வெற்றி வெளிச்சம் என்பதுடன் கதை முடிக்கிறது.
எளிய சொற்கள், எதார்த்தமான கருக்கள் கொண்ட கதைகள் இவருடையது.


கருத்துகள்
கருத்துரையிடுக