முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணல்மேல்குடி, கவி.வெண்ணிலவன்

 புதுக்கோட்டை எழுத்தாளர் -202

மணல்மேல்குடி, கவி.வெண்ணிலவன். இயற்பெயர் - பா.வெற்றிவேல். ஊர் - மணமேல்குடி. இவரது சித்தி மகள் தங்கையின் பெயர் வெண்ணிலா.  தங்கை அவரது மீது காட்டிய அன்பு, பாசத்தின் பேரால் தனது பெயரை வெண்ணிலவன் என்று மாற்றிக்கொண்டார். வெண்ணிலாவின் தோழி கவிதா இவரது மீது பாசம் காட்டியதால் வெண்ணிலவன் எனும் புனைப் பெயருக்கும் முன் கவி சேர்த்துக்கொண்டு மணமேல்குடி கவி. வெண்ணிலவன் எனும் புனைபெயரில் எழுதி வருகிறார். சிறுகதையாசிரியர்,  கவிஞர், நாடக ஆசிரியர். சிறுகதை, கவிதை, வானொலி நாடகங்கள்  என 127 படைப்புகள் எழுதியுள்ளார். மணமேல்குடி ஸ்ரீ ஜெகதீஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர். உலகத் திருக்குறள் பேரவையின் மணமேல்குடி கிளைத் தலைவர்.

வெற்றி வெளிச்சம், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. ஆண்டு -2005. வேமன் பதிப்பகம். ஆசியுரை பொன்னம்பல அடிகளார். வெற்றி வெளிச்சம் எனும் தலைப்பிட்ட சிறுகதை அய்யனார் கோவிலில் மீது ஊர் கொண்டுள்ள பக்தியைக் காதல் கொண்டு பேசுகிறது. வைதேகி, ராஜேஷ் இருவரும் ஒரே ஊரைச் சார்ந்த மாற்றுச் சமூகத்தவர். இருவரும் காதலிக்கிறார்கள். அவ்வூர் அய்யனார் பூசாரி சாமிவந்து ஆடி, " என் பொண்ணு வேற சாதிப் பையனை விரும்புறா. அந்தப் பையனுக்கு என் பொண்ணக் கட்டிக் கொடுக்கலாமா....?. அந்தப் பையனை இந்தப் பொண்ணு கட்டிக்கக் கூடாது. அப்படிக் கட்டிக்கிட்டா உன் வம்சமே அழிஞ்சிபோயிடும் " என்று  சொல்கிறார்.

சாமிக்குப்  பயந்து வைதேகி ராஜேஷ் அவளது காதல் உறவை முறித்துக்கொள்கிறாள். மூடநம்பிக்கை இருட்டில் கிடக்கிறதே இந்தக் கிராமம் என்ற அவனது மனதில் மின்னலாய் வெளிச்சம் போட்டு, உண்மையை அழுத்தம் திருத்தமாய்க் கூறிவிட்டு நடந்து போன அவளையே மலைப்புடன் பார்த்துக்கொண்டு நின்றான் ராஜேஷ்.

இது புது வெளிச்சமா? இல்லை, மண்ணின் மான்பைக் காக்கும்  வெற்றி வெளிச்சம் என்பதுடன் கதை முடிக்கிறது.

எளிய சொற்கள், எதார்த்தமான கருக்கள் கொண்ட கதைகள் இவருடையது.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...