புதுக்கோட்டை எழுத்தாளர்கள் - 203 (புதுக்கோட்டையை எழுதிய நூல்கள்)
அரிமழத்தலபுராணம்
- மூலமும் குறிப்புரையும்,
இந்நூலை எழுதியர் மு.ரா.கந்தசாமிக் கவிராயர். இவர் சமஸ்தான வித்வான் ஸ்ரீமத் இராமராமிக்
கவிராயரின் குமாரர். மதுரை விவேகபாநுப் பத்திராதிபர்.
இந்நூலை இயற்றும்படி கேட்டுக்கொண்டவர் அரிமழம்
மு.அ.செ. முத்தையா செட்டியாரின் குமாரர் செல்லப்ப செட்டியார். இந்நூல் இயற்றப்பட்டு
வெண்பாக்களைப் பரிசோதித்தவர், சே.ரா. சுப்பிரமணியக் கவிராயர். 1907 ஆம் ஆண்டு மதுரை
விவேகபாநு அச்சியந்திரசாலையில் பதிக்கப்பட்டது. இந்நூலின் மொத்தப் பக்கங்கள் –
165.
அரிமழத்தார் என்பது சிவபெருமான்.
இந்நூலுக்கு சாற்றுக்கவிகள் நால்வர் எழுதியுள்ளார்கள். அரிமழம் ஸ்ரீசிவாந்நதசுவாமி,
அவரது மாணாக்கரும் ஸ்ரீ கா.ந.நரசிம்மசாஸ்திரியின் புத்திரருமாகிய ஸ்ரீ காமாட்சி சாஸ்திரி
மற்றும் சோழவந்தான் வித்துவான் ஸ்ரீமத் அ. சண்முகம்பிள்ளை, முறையூர் ஸ்ரீமாந்பழ.சி.ஷண்முகஞ்செட்டியாரின்
புதல்வர் சமூக வித்துவான் கொட்டாம்பட்டி மகா ஸ்ரீ கருப்பையாப் பாவலர் என நால்வர் எழுதியுள்ளனர்.
இந்நூலில் வாழ்த்துப் பாடலுக்கும் முன்பாக பரமசிவன்,
உமையம்மை, சபாநாயகர், சிவகாமியம்மை, சுந்தரேசர், மீனாட்சியம்மை, தட்சிணாமூர்த்தி, முன்னாண்ட
விநாயகர், பரிபாலவிநாயகர், குமரக்கடவுள், பாலதண்டாயுதபாணி, செல்லத்தையனார், முத்தையனார்,
வயிரவர், விளங்கியம்மன், சரசுவதி, திருநந்திதேவர், திருஞானசம்பந்த சுவாமிகள், திருநாவுக்கரசு
சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசக சுவாமிகள், தண்டியடிகள், மற்றைநாயன்மார்
ஆகியோர் பாடப்படுகிறார்கள்.
இந்நூல் காப்பு,
பாயிரம், நாட்டுப்படலம், திருநகரப்படலம், நைமிசாரணியப் படலம், தலவிசேடப் படலம், தீர்த்தவிசேடப்படலம்,
மூர்த்திவிசேடப்படலம், இந்திரன் பூஜித்தபடலம், சந்திரன் பூஜித்தபடலம், வெள்ளாற்றுப்படலம்,
சுவேதகேது பூஜித்தபடலம், தடாதகைப் பிராட்டியார் தவம்புரி படலம், சுந்தரேசப்படலம், திருப்பணிப்படலம்,
செல்லய்யனார் திருவிளையாட்டுப் படலம், திருவிழாப்படலம், விளங்கியம்மன் விளங்கியபடலம்,
திரிபதார்த்த சிந்தனைப்படலம் ஆகிய படலங்களாக இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. நாட்டுப்படலத்தில்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகள் பாடப்பட்டுள்ளன. திருநகர்படலத்தில்
புடைநகர், இடை நகர், உண்ணகர், கணிகையர் வீதி, கடை வீதி, சூத்திரர் வீதி, வைசியர் வீதி,
அரசர் வீதி, அந்தணர் வீதி என வீதிகள் பாடப்பட்டுள்ளன.
இந்நூலின் இறுதியில் குறிப்புரை கொடுக்கப்பட்டு அகராதி
வரிசையில் இல்லாமல் பாடல்கள் வரிகளிலுள்ள சொற்களுக்குப் பொருள் விளக்கம் தருகிறது.
இந்நூலில் பாயிரம் – காப்பு இவ்வாறு பாடப்பட்டுள்ளது.
பொன்பரவு
வெண்கயிலைப் பொருப்பரசு நிம்பமலர்
பொறுத்த நொம்பை
யின்பமுற
மணந்துகலந் தீன்றெடுப்ப வளர்ந்துதனை
யிறைஞ்சிப் போற்று
மன்பருளந்
தொறும்பூத்துக் காயாது கனியுமத்தி
யடியி னீழன்
முன்பரவிப்
புகுந்தவரே வெம்பிறவி யிகந்துநல
முழுகுவாரே.

கருத்துகள்
கருத்துரையிடுக