புதுக்கோட்டை எழுத்தாளர் - 204
சி.ஆ.வெ.இராமலிங்க செட்டியார், சுப்பிரமணியபுரம்.
ஸ்ரீகந்தரம்மானை இவர் எழுதிய நூல். சிதம்பரம் ஸ்ரீசிவராமன் செட்டியார் பரிசோதித்து தஞ்சாவூர் மாநகரம் ஸ்ரீ வித்யா விநோதினி அச்சுக்கூடத்தில் இந்நூல் அச்சிடப்பட்டது. ஆண்டு 1912. பக்கங்கள் – 266.
இந்நூல் முருகவேளின் கதையைப் பாடுகிறது. கச்சியப்ப சிவாசாரியசுவாமிகள் கந்தபுராணம் அருளினார். அதனைச் சுருக்கி தருமபுர ஆதினத்துச் சம்பந்த சரணாலய சுவாமிகள் புராணம் அருளினார். இவ்விரு நூல்களையும் ஆழ்ந்து கற்றுணர்ந்து யாவரும் பொருள் விளங்கி இனிது படிக்கும் பொருட்டு சி.ஆ.வெ. இராமலிங்க செட்டியார் ஸ்ரீகந்தரம்மானைப் பாவாய் இயற்றியுள்ளார்.
உற்பத்தி காண்டம், அசுரகாண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவகாண்டம், தட்ச காண்டம் என ஆறு காண்டங்களைக் கொண்டது. இந்நூல் காப்பு, சிவருமான்துதி, உமாதேவியர் துதி, விநாயகர் துதி, சுப்பிரமணியர் துதி, வீரவாகுதேவர் துதி, சமயகுரவர்கள் துதி, கச்சியப்ப சிவாசாரியாரி துதி ஆகிய துதிகளைக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இந்நூல் அரங்கேறிய விதத்தை நூலாசிரியர் இவ்வாறு பாடுகிறார்
‘சுந்தர வினாயருஞ் சுப்ரமணிய தேவருமே
சிந்தை மகிழ்ந்தே மேவுஞ் சிவசுப்ரமண்ய நகர்
ஆலயத்தின் முன்முகப்பி லாகமத்தினோடு பல
நூலுணர்ந்துயீடொருவர் நுவலுதற்கில்லாதவல்ல
தில்லை வாழ்ந்தனர். செல்லச்சாமி தீட்டசாமுன்
அல்லல கற்றுங் சுந்தரம் மானையரங் கேற்றினனே’

கருத்துகள்
கருத்துரையிடுக