முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வைரநதி

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 216

வைரநதி, இயற்பெயர் - வைர.ந.தினகரன். (பெற்றோர் - வைர.நமசிவாயம், யோகம்பாள் தம்பதியினர்). பெற்றோர் பெயர்களின் முதல் எழுத்துகளைக் கொண்டு வைரநதி என்று புனைபெயராக மாற்றிக்கொண்டவர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயிலுக்கு அருகில் 12 ஆம் நூற்றாண்டில் வீரசோழியம் எழுதிய புத்தமித்திரன் வாழ்ந்த புண்ணியபூமியாம் பொன்பேத்தி- பேரானவூரில் பிறந்தவர். 

சமூகவியல் மற்றும் நூலக தகவல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர் தற்பொழுது நூலக தகவல் அறிவியலில் ஆராய்ச்சி படிப்பு (Ph.D.) மேற்கொண்டுள்ளார்.

ஒரு நதியின் கீதம் (2007)

விழித்தெழு தமிழா ( 2009) என்று இரு நூல்கள் எழுதியுள்ளார்.

ஒரு நதியின் கீதம், எனும் இந்நூல் புற உலகவாழ்வில் தனது மனதைப் பாதித்தவைகளைக் கருவாகக் கொண்டு வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. கீதம் என்றால் என்ன? காதல் கீதமா? மகிழ்ச்சிக் கீதமா? சோகக் கீதமா? புரட்சிக் கீதமா? நதி கீதம் பாடுமா? நதி கீதம் பாடும். நதி பாடும் கீதத்தைக் கேட்டு ரசிப்பவர்கள் பலர் உண்டு. இந்த நதியின் கீதம் காதல், சோகம், புரட்சி, மகிழ்ச்சி, சமூகம், தேசியம் என்று தொகுக்கப்பட்டுள்ளது.

சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போது சின்ன சின்னக் கவிதைகள் எழுதியவர் அரசியல், நகரத்து நிகழ்வுகள், நண்பர்களின் காதல் இவற்றை கவிதையாக எழுதி கவிஞரானவர். கவிதை என்பது எளிய பாமர மக்களுக்குப் புரியும் படியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். கவிதைகள் எழுதி அதற்கு விளக்கவுரை எழுத முனைவதில் எனக்கு உடன்பாடில்லை, என்கிறார். இந்நூலுக்கு கவிஞர் பாலா, கவிவேந்தர் மு.மேத்தா முன்னுரை தந்துள்ளார்கள்.

இத்தொகுப்பிலிருந்து இரு கவிதைகள்

நிலவெனும் முஸ்லீம் பெண்
தன் முகத்தை
மறைக்க
அணியும் கருப்பு பர்தா


2.

கால் தடுக்கி
நான் விழுந்தேன்
எழுந்த போது ! கவிஞனானேன்
காரணம்,
தடுக்கியது தாவணியாயிற்றே!




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...