புதுக்கோட்டை எழுத்தாளர் - 217
காரை வீரைய்யா, (பிறப்பு -1950; பெற்றோர் சுப்பையா - சீதையம்மாள்) புதுக்கோட்டை காரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர். சமூக நல ஆர்வலர். துணை வட்டார வளர்ச்சி அலுவலனாகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின் எழுத்துப் பணியின் மூலம் சமூகத்திற்குத் தொண்டு செய்கிறார்.பல நூல் எழுதியுள்ள இவர் அணு ஆயுத வெள்ளமும் தீவிரவாத தீயும் என்ற நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
தனிமனித ஒழுக்க வாழ்க்கையே ஒழுக்கமான சமூகத்தை உருவாக்கும் என்கிற கருத்தை தன் எழுத்து வழி வலியுறுத்துபவர்.
ஆசை பொல்லாதது (1979),
சமாதானப் புறா (2006)
அன்பு பெருகட்டும் மோதல் குறையட்டும் (2010)
அணு ஆயுத வெள்ளமும் தீவிரவாதத் தீயும் (2018)
இது சரவெடி அல்ல சாட்டை அடி - கவிதைகள் (2019)
என ஐந்து நூல்கள் எழுதியுளளார்.
இது சரவெடி அல்ல சாட்டை அடி - கவிதைகள் எனும் இத்தொகுப்பு மனித சமூக அவலங்களை எடுத்துக் கூறும் எச்சரிக்கை மணி மற்றும் விழிப்புணர்வு கவிதைகள். இத்தொகுப்பில் ஏழைத் திருடனும் பணக்காரத் திருடனும் என்றொரு கவிதை. பசித்திருடன், பக்குவத் திருடன், உல்லாசத் திருடன், அடாவடித் திருடன், அதிகாரத் திருடன், ஏழைத் திருடன், பணக்காரத் திருடன், பங்குத் திருடன் என்று திருட்டு வகை கவிதைகள். அதில் பங்குத் திருடன் குறித்து இவ்வாறு பாடுகிறார்.
கொல கொலயா மந்திரிக்கா
கொழஞ்சு போச்சு கத்திரிக்கா
கொள்ள அடிச்சது நூறுபவுனு
மூன்று பேருக்கு முப்பது மூனு
மிச்சம் ஒரு பவுனு
சண்டை போட்டுக் கொள்ளும்
பங்குத் திருடன்


கருத்துகள்
கருத்துரையிடுக