புதுக்கோட்டை எழுத்தாளர் – 213
கு. மாரிமுத்து, இலக்கியக் காவலர் என அழைக்கப்பட்டவர். ( பிறப்பு – 15.06.1957, பெற்றோர் – குட்டிச்சாமி, பாலாயி அம்மாள்) புதுக்கோட்டை காந்தி நகர், 7 ஆம் வீதி. புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பதிப்பாசிரியர், நூலாசிரியர்.காந்தியத்தின் அகிம்சை கோட்பாடு, பெரியாரின் பகுத்தறிவு, அம்பேத்கரரின் ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைக்கான போராட்ட தத்துவங்கள், மார்க்சின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத் தத்துவங்களில் தேர்ந்தவர்.
இந்திய மனித உரிமைக் கட்சியின் அரசியல் ஆலோசராகவும், புதுக்கோட்டை மாவட்ட டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை நிறுவியர்களில் ஒருவர். மேலும் புதுக்கோட்டை பாவாணர் பாசறை நிறுவனர்களில் ஒருவர். இவர் வெண்மணிப் பதிப்பகம் நிறுவி நிறைய நூல்களை அச்சிட்டு வெளிக்கொணர்ந்தார்.
மகரந்தம் காணாத மலர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு இவரது முதல் நூலாக 1989 ஆம் ஆண்டு வெளிவந்தது. மேலும் வீரஞ்செறிந்த விடுதலை வீரன் மதன்லால் தில்காராவின் வீர வரலாற்றை விளக்கும் நாடகம், 47 இல் போட்ட பாதை நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.
இவரது பதிப்பகமான வெண்மணிப் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த நூல்களில் “ சந்தப்பா வேந்தர், புலவர் யா. வென்னரசு கவிதைகள்” மிக முக்கிய நூலாகும். இந்தப் பதிப்பகத்தின் மூலம் இலக்கியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினார். “ சந்தப்பா வேந்தர் புலவர் யா. வென்னரசு இலக்கிய விருது” தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, இலங்கை , சிங்கப்பூர் என்று பல மாநிலங்கள் நாடுகளிலிருந்து புதுக்கோட்டைக்கு வருகைத் தந்து பெற்றுள்ளார்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக