புதுக்கோட்டை எழுத்தாளர் - 224
புதுக்கோட்டையின் தலையெழுத்தை எழுதிய நூல்கள் வரிசை - 02/02
தெப்பனா பட்டா எழுதிய ஸ்மிருதி சந்திரிகா (1150 - 1225), விக்னேஷ்வரா எழுதிய மிடாக்ஷரா இவ்விரு நூல்களும் சமஸ்தான காலத்தில் புதுக்கோட்டையை ஆட்சி செய்த நூல்களாகும்.
மிடாக்ஷரா எனும் இந்நூலை எழுதிய விக்னேஷ்வரா , இந்து சட்ட அறிஞர்.
இந்து சட்டத்தில் செல்வாக்குமிக்க சட்டங்களாக இவரது நூல் ஷரத்துகள் இருந்துள்ளன. இந்நூல் யாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதி பற்றிய ஆய்வு நூலாகும். யாஜ்ஞவல்க்ய என்பது ஒரு இந்து முனிவரின் பெயர். இவரது கருத்தாக்கமே யாஜ்ஞவல்க்ய ஸ்மிருதி. இந்நூல் பற்றி ஆய்வு செய்து எளிமைப்படுத்தப்பட்ட நூல் மிடாக்ஷரா.
இந்நூலை எழுதிய விக்னேஷ்வரா கர்நாடகாவில் குல்பர்காவிற்கு அருகில் உள்ள மார்தூர் கிராமத்தில் பிறந்தவர். இவர் மேற்கு சாளுக்கியப் பேரரசின் அரசரான ஆறாம் விக்ரமாதித்யாவின் (1076-1126) அரசவையில் வாழ்ந்தவர்.
மிடாக்ஷரா என்பது பார்லிமென்ட் மூலம் உருவாக்கப்பட்ட சட்டம் அல்ல. அந்த நாட்களில் பாராளுமன்றம் என்கிற அமைப்பு இல்லை மற்றும் சட்டம் கற்றறிந்த சட்ட வல்லுனர்களின் கட்டுரைகளைக் கொண்டது. மிடாக்ஷரா இந்து சட்டத்தின் அதிகாரப்பூர்வ நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது,
இந்து திருமணச் சட்டம், இந்து வாரிசுரிமைச் சட்டம், இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் ஆகியவை முக்கியமான சட்டங்களில் சில. இந்தச் சட்டங்கள் 1955 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் சுதந்திர இந்திய பாராளுமன்ற சட்டங்களால் மாற்றப்பட்டன.
ஸ்மிருதி சந்திரிகா, மிடாக்ஷரா இவ்விரு நூல்களும் எழுதப்பட்ட மையம் மைசூர் ஆகும்.
புதுக்கோட்டை சமஸ்தானச் சட்டப்பேரவை மைசூர் சட்டப் பேரவையை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.
ஆதாரம் -
தமிழ்நாடு அரசின் தமிழரசு இதழ் (16.04.1983 )
எப்.ஆர். ஹெமிங்வே எழுதிய புதுக்கோட்டை ஸ்டேட் (1906)

கருத்துகள்
கருத்துரையிடுக