முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புலவர் துரை.மதிவாணன்

 புதுக்கோட்டை எழுத்தாளர் -222

புலவர் துரை.மதிவாணன், இயற்பெயர் தனுக்கொடி.   பிறப்பு - 14.12. 1930 பெற்றோர் - துரைச்சாமி , அம்மணி அம்மாள்.  புதுக்கோட்டை குளத்தூர் தாலுகா தொடையூரில் பிறந்தவர்.

பள்ளிப் பருவத்தில் குடியின் கொடுமை, குணவதியின் கண்ணீர் ஆகிய நாடகங்களில் நடித்தவர்.

திமுக அமைப்பு தொடங்கிய கால முதற்கட்ட உறுப்பினர். குளத்தூர் வட்ட திமுக முதல் செயலாளர். டால்மியாபுரம் பெயரைக் கல்லக்குடி என மாற்றக் கோரிய போராட்டத்தில் கலைஞர் மு. கருணாநிதியுடன் கலந்துகொண்டு சிறை சென்றவர்.




திராவிட நாடு கொள்கையில் தீரா நம்பிக்கைக்கொண்டிருந்தார்.  இக்கோரிக்கைக்காக சிறை நிரப்பும் போராட்டத்தில் சிறை செல்ல முன்வந்தார். இக்கோரிக்கையைத் திமுக கைவிட்டதும் அந்த அமைப்பிலிருந்து விலகினார். 1964 இல் தமிழாசிரியராகப் பணியேற்று தமிழ்ப்பணியாற்றி வந்தார். 1987 ஆம் ஆண்டு பணி ஓய்வு. புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் திருமதி பா.புவனேசுவரி அவர்கள்  இவரது மாணவியர்.

திராவிடக் களஞ்சியம் எனச் சொல்லும் அளவிற்கு திராவிடப் பற்றும் ஆழந்த போராட்ட அனுபவமும் பெற்றவர். ஈழத்தமிழ் ஆதரவாளர்.  தமிழர்த் தேசியம் இவர் கொண்டிருக்கும் கொள்கைகளில் ஒன்று.

க. முத்துச்சாமி வல்லத்தரசு மீது இவருக்குப் பெரும் மதிப்பு உண்டு . 1981 ஆம் ஆண்டு வல்லத்தரசு விழா நடத்தி கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகளை நடத்தியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட உலகத் தமிழ்க் கழகம் எனும் அமைப்பு துரை. மதிவாணன் முயற்சியின் பேரால் தொடங்கப்பட்டது. இவர் தொடங்கிய மற்றொரு அமைப்பு சிற்றூர் சீர்திருத்தக் கழகம்.

இவரது வாழ்வில் நடந்தேறிய ஒரு சம்பவத்தை மையமாக வைத்து எழுத்தாளர் சுப்ர.பாலன் வெளியேற்றம் எனும் ஒரு சிறுகதை எழுதியுள்ளார்.

மறைமலை அடிகள் விருது, தமிழ்த்தேசியச் செம்மல் விருது, குறள்நெறிச் சான்றோர் விருது உட்பட பல விருதுகள் பெற்றவர்.  எழுகதிர் எனும் மாத இதழில்,"திராவிட இயக்க மூத்தத் தோழரின் அனுபவங்கள் " எனும் தலைப்பில் தொடர் எழுதி வருகிறார். விரைவில் இத்தொடர் நூலாக்கம் பெற இருக்கிறது.

இவரது தமிழ்ப்பணியைப் பாராட்டி புதுக்கோட்டை ஆறாவது புத்தகக  திருவிழா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி வாழ்த்துகிறது. 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...