முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை எழுத்தாளர் -107

சிகரம்.சதீஷ்குமார். சிகரம் என்றொரு மாத இதழ் நடத்தியதால் பெயருக்கும் முன்பு சிகரம் சேர்ந்துகொண்டது.  திருவரங்குளம் ஒன்றியம் கீரமங்கலம் கிராமத்தவர். செங்கமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், ஆகிய மங்கலம் ஊர்களால் சூழப்பட்டது இவரது கிராமம். ஆசிரியர்,கவிஞர், மனிதவள மேம்பாட்டு ஆலோசகர், கல்வி ஆலோசகர், கல்வியாளர்கள் சங்கமம் நிறுவனர். இந்த வருடம் சிறந்த ஆசிரியருக்கான மாநில அரசு விருதான டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர். இதுதவிர

மகாத்மா காந்தி விருது,
சிகரம் தொட்ட ஆசிரியர் விருதுகளும் பெற்றுள்ளார். திருச்சி  வானொலி, பண்பலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்.  குமுதம், சிநேகிதி,தினமணி, தி இந்து  இதழ்களில் எழுதி வருகிறார். பைந்தமிழ் பாவலர் சி.துரைமாணிக்கம் அவர்களின் மாணவர் இவர்.

தமிழனென்ற கருவம் எனக்குண்டு, எனும் இந்நூல் கதை சொல்லும் கவிதைகளின் தொகுப்பு. காமராசர், வைரமுத்து, குழந்தைகள், மகளிர் என பலரையும் பாடுகிறது.  மக்களின் பொதுநலம் சார்ந்து நம்பிக்கை ஊட்டுகிறது. 




இத்தொகுப்பில் ஒரு கவிதை . தலைப்பு - குழந்தைத் தொழிலாளியின் மரண வாக்குமூலம்

நான்
நடந்து வரும் பாதையிலும்
கடந்து வரும் காட்சியிலும் கண்ட நிரபராதியின் வாக்குமூலம்...

பாடசாலை செல்லும் வயதில் தொழிற்சாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்பும்
அப்பாவி பெற்றோர்களே !
நான் சொல்வதைச் சற்றுக் கேளுங்கள்...

என்ன! சொல்ல நான் யாரா ?
அப்பாவி பெற்றோர்களை
அப்பா என்றும் அம்மா என்றும் அழைக்கும் மகன்களில் ஒருவன்..

உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் என்ன! வெடிமருந்து தொழிற்சாலைகளும் உணவகங்களும்
தானே!

நீங்கள் அடைத்துவிட்டீர்கள்
எங்களின் வாழ்வைத் தீப்பெட்டியின்
நான்கு சுவற்றுக்குள்...

நீங்கள் பற்றவைக்கும்
ஒவ்வொரு தீக்குச்சியில் தெரிகின்றதா? எங்களின் முகம்!

நீங்கள் வெடிக்கும்
ஒவ்வொரு பட்டாசுச் சத்தத்திலும் கேட்கின்றதா
எங்களின் அழுகுரல்

எங்கள் வயதுப் பிள்ளைகள் உணவகங்களில்
அழகாய் அமர்ந்து சாப்பிட்டுபோன பிறகு ஒவ்வொரு மேசையைத் துடைக்கும் பொழுதும்
எங்கள் இதயத்தின் இரத்தம்
கண்களின் கரையைக் கண்ணீராய் கடக்குமே
அது தெரியுமா? உங்களுக்கு

சீருடை அணிந்து பள்ளி செல்லும் குழந்தைகளைக் காணும் பொழுதெல்லாம்
கிழிந்து போன எங்களின் ஆடையை விட அதிகம்
கிழிந்துபோவது
எங்களின் மனதுதான்...

வற்றாத ஜீவநதியாய்
வசந்தங்கள் வழிந்தோட வேண்டிய வயதில்
வறண்ட பாலையாய் -தொலைத்துவிட்டீர்கள்
எங்கள் வாழ்வை

எம்மை பெற்றோருக்கும்
எம்மை ஆள்வோருக்கும்
சொல்ல விரும்புவது ஒன்றுதான்...

எங்களைத் தொலைத்துவிட்டு
நீங்கள்
யாருக்காக வாழப்போகிறீர்கள்
யாரை வைத்து ஆளப்போகிறீர்கள்..

உயிரோடு இருக்கும்பொழுதே _எங்கள் தலைகள்
நீங்கள் வைத்த கொள்ளி
இனிவரும் தலைமுறைக்காவது வெளிச்சத்தைக் கொடுக்கட்டும் ...

இப்படியாக முடிந்தது
குழந்தைத்  தொழிலாளியின்
மரண வாக்குமூலம்...

அண்டனூர் சுரா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...