முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பா.சு.ரமணன்

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 208

பா.சு.ரமணன், இயற்பெயர் பா. சுவாமிநாதன், பிறப்பு - ஆவுடையார் கோவிலுக்கும் அடுத்து குடிகாடு. தற்போது சென்னையில் வசிக்கிறார்.
எழுத்தாளர். பத்திரிகையாளர். அரவிந்த்,  அரவிந்த் சுவாமிநாதன், சிசுபாலன்,  அரவிந்த் செல்லையா ஆகிய புனைப்பெயர்களில் படைப்புகள் தருகிறார்.

சித்திரக் கவிஞர் அ.ப.சுவாமிநாத சர்மா அவர்களின் பேரன்.  வட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'தென்றல்' மாத இதழின் இணை ஆசிரியர். ஆன்மீகம் தொடர்பான பத்தி எழுத்துகள், தொடர், கட்டுரைகள் எழுதி வருகிறார். ஆனந்த விகடன் இவரது படைப்புகளை நூலாக்கம் செய்துள்ளன. 

சித்திரக் கவி மீது ஈடுபாடு கொண்டவர். இந்த வடிவக் கவிதைகள் குறித்தும் சித்தர்கள், சிறு தெய்வங்கள்,  தேவதைகள் குறித்தும் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

வரம் தரும் அன்னை, ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், சத்குரு சேஷாத்ரி சுவாமிகள், குரு தரிசனம் இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவை.

இவரது தந்தை ப.சு.பாலசுப்பிரமணியன் எழுத்தாளர். இலக்கிய ஆர்வலர். கதை, சிறுகதை, நாடகம் எழுதியுள்ளார். ஆனந்த விகடன் இதழில் முத்திரை கதைகள் எழுதி பரிசு பெற்றவர். இவரது தாயார் ஆனந்தி பாலசுப்பிரமணியன் ஆனந்தி மணியன் எனும் பெயரில் குமுதம் சிநேகிதி இதழில் கதைகள் எழுதியுள்ளார்.

அருட்பெருஞ்சோதி ( வள்ளலாரின் வாழ்வும் வாக்கும் ) எனும் நூல், இவர் எழுதிய நூல்களில் முக்கியமானது. எல்லா கடவுள்களும் அன்பையே போற்றுகிறார்கள்; எல்லா மதங்களுமே சக மனிதர்களை நேசிக்குமாறுதான் போதனை செய்கின்றன. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற உண்மையை மறந்து, இறுக்கமான சம்பிரதாயங்களுக்குள் வழிபாடுகள் சென்று சிக்கிக்கொள்ளும்போது, கடைத்தேறும் வழி புரியாது மக்கள் திணறிப் போகிறார்கள். கடவுளே செய்வதறியாது திகைத்துப் போகிறார். இப்படிப்பட்ட இறுக்கமான சூழல் சமூகத்தில் நிலவும்போதெல்லாம் யாரோ ஒரு மகான் வந்து அவதரித்து, மக்களுக்கான மார்க்கத்தை உணர்த்துகிறார். அது ஏற்கனவே இருந்த பாதைதான். பயணத்தின் உண்மை புரியாத யாரோ அதை அடைத்து வைத்திருந்தார்கள்; அதை மக்கள் பயன்படுத்த விடாது செய்திருந்தார்கள். அந்த மகான் வந்து தடைகளைத் தூளாக்கும்போது, பொங்கிப் பிரவாகம் எடுக்கும் நதிவெள்ளம் போல பின்தொடர்கிறார்கள் மக்கள்.அப்படி ஒரு சூறாவளியாக அவதரித்தவர்தான் வள்ளலார். அவர் வாழ்ந்த காலத்தில் அவரைப் புரிந்துகொண்டவர்கள் குறைவு. பள்ளிகள் சென்று பயிலாமலே பாக்கள் இயற்றிய ஞானக் குழந்தை அவர். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ எனப் பாடிய அவரது மனம் உன்னதமானது. ‘துன்பங்களில் சிக்கித் தவிக்கும் மக்களைக் கைதூக்கி விடுவதுதான் வழிபாட்டின் பலன்’ என்பதை உணர்ந்திருந்தவர். ‘பசியோடு இருக்கும் ஒருவருக்குக் கல்வி புகட்ட முடியாது’ என்பார்கள் ஆசிரியர்கள். ‘பசியில் தவிப்பவருக்கு கடவுளே எதிரில் வந்து நின்றாலும் கும்பிடத் தோன்றாது’ என்ற உண்மையை உணர்த்திய ஞானாசிரியர் அவர். பசியை ஒரு பிணி என்றார் அவர்; அந்தப் பசிப்பிணி போக்குவதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது... பல வயிறுகளில் எரியும் பசித்தீயை ஆற்றிக்கொண்டிருக்கும் அந்த அணையா நெருப்பின் சுடர் வள்ளலார்.

 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...