முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாமி. பழனியப்பன்

புதுக்கோட்டை எழுத்தாளர் -210

சாமி. பழனியப்பன், புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்தவர். இவர் தொழிற்பொருட்டு  கொழும்பில் வசிக்கையில் அங்கு  வீரகேசரி இதழில்  துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

 1947 ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரமடைய அந்தச் சுதந்திரத்தை விமர்சிக்கும் பொருட்டு 'யாருக்குச் சுதந்திரம்?' என்ற கவிதையை எழுதி அனுப்ப புதுக்கோட்டையில் இயங்கிய வந்த  பொன்னி இதழ் அக்கவிதையைப் பிரசுரம் செய்தது. இக்கவிதையால் தமிழகத்திலும் கொழும்பிலும் சர்ச்சையானது. இதனால் வீரகேசரி ஆசிரியருக்கும் கவிஞருக்கும்  கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆகவே சாமி பழனியப்பன் வீரகேசரி பத்திரிகையிலிருந்து விலகித் தமிழகம் திரும்பினார். பின்னர்  அக்கவிதைக்கு எதிரான கொந்தளிப்பை அமைதிப்படுத்த  'அமைதி கொள்க' என்றொரு கவிதையை எழுதினார். அக்கவிதையை 1947 நவம்பர் பொன்னி இதழ் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரை கவிஞராக ஏற்றுக்கொண்டது. 

'தமிழகம்' திரும்பிய இவர் பின்னர் 'பொன்னி', 'வாரச்செய்தி', 'தமிழகம்', 'தென்றல்' முதலிய பத்திரிகைகளில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடம் தனது உதவியாளராகவும், பின்னர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடம் எழுத்து உதவியாளராகவும் பணிபுரிந்தார்.

'பாரதியும், பாரதிதாசனும்', 'சிரிக்கும் வையம்', 'சாமி பழனியப்பன் கவிதைகள்' ஆகிய கவிதை நூல்களையும் பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்.

பின்னர், 'தமிழரசு' பத்திரிக்கையின் உதவி
ஆசிரியராகவும், தமிழக அரசின் பெரியார் நூற்றாண்டு விழாவின் தொடர்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது 'சாமி பழனியப்பன் கவிதைகள்' என்னும் கவிதைத் தொகுப்புக்குத் தமிழ்நாடு அரசு முதற்பரிசு வழங்கியுள்ளது. மேலும் 1990-ல் தமிழக அரசு பாவேந்தர் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

பொன்னி இதழில் பிரசுரமான அமைதி கொள்க கவிதை இது.

அலைகடலே! இவ்வுலகின் பெரும்பகுதி தன்னை
ஆளுகிறோ மென்கின்ற ஆணவத்தி னாலா
நிலைகெட்டுச் சினக்கின்றாய்? உன்னா லிந்த
நீணிலத்திற் கெள்ளளவும் நன்மை யுண்டா?
அலைகளைநீ அடுக்கடுக்கா யனுப்பு கின்றாய்,
அன்னவையோ மடிந்துபடும் ஒவ்வொன் றாக,
நிலைமறந்தே, உயர்வானைப் பிடிக்க ஏனோ
நினைக்கின்றாய்! மறந்துவிடு! அமைதி கொள்வாய்!


வறுமையிகு தொழிலாள ருணர்வு பெற்று,
வஞ்சகரின் நெஞ்சுகளில் வாள்பு குத்தப்
புறப்பட்டா ரெனக்கூறும் வகையில் நீயும் பொங்குகின்றா யென்றாலும் மறுக ணத்தில்
இறந்துவிடு கின்றனையே! புறப்பட் டோரின்
இறுதிநிலை யுணர்த்துவதா யெண்ணம் போலும்!
மறந்துவிடு! தொழிலாளர் புரட்சி தன்னை மாய்க்கவொணா திவ்வையம்! அமைதி கொள்வாய்!

மணித்துளிகள் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சென்று
மடிதலுக்கோர் எடுத்துக்காட் டாய்வி ளங்கும்
அணிவகுத்துச் சென்றழியும் அலைகள் யாவும்!
ஆர்ந்துள்ள இவ்வுலகில் பெண்ணொ ருத்தி;
கணிகையென ஆகிள்றாள் சிலரைச் சேர்ந்தால்!
காரிகைகள் பல்லோரை ஒருவன் சேர்ந்தால்
கணிகனென அன்னவனைக் கழற மாட்டார்
கடலே!அத் துணிவாலா நீயு மிந்நாள்,


திங்களினைக் கண்டதுமே மேலெ ழும்பித் தீராத காதலினைத் தீர்க்க எண்ணிப் பொங்குகின்றாய்? அதனாலே பயனென் கண்டாய்?
புன்மைக்கும் அன்னவனோ ஒப்ப வில்லை.
மங்காத காதல்கொண்ட அல்லி என்னும் மலர்வனிதை தனைக்கலந்த பின்னர் வேறு
நங்கையினைக் காதலித்தல் தவறா மென்று
நகைத்தலினைக் கண்டிடுவாய் அமைதி கொள்வாய்!

இப்பாடல் பொன்னி நவம்பர் 1947  மலர் -1 இதழ் -10 இதழில் பிரசுமானது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...