முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சேந்தன்குடிச் செந்தமிழாழன்

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 227


பாவலர் சேந்தன்குடிச் செந்தமிழாழன், இயற்பெயர் த. பாலசுப்பிரமணியன். தங்கை பாலா ஆசினி, சேந்தன்குடி செந்தமிழாழன் எனும் இரு புனைப் பெயர்களில் எழுதி வருகிறார். (பெற்றோர் - ஆ.தங்கையன்,  த.பத்மாவதி ) புதுக்கோட்டை. தொடக்கப்பள்ளி ஆசிரியர்.

ஆந்திராவில் எழுதப்பட்ட நானிலு கவிதை வடிவம் இங்கே தன்முனை கவிதையாக வடிவம் பெற்றிருக்கிறது என்று வாழ்த்துரை வழங்கியிருக்கும் தமிழ்ச்செம்மல் பாவலர்மணி இராம வேல்முருகன் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.

மனிதம் தேடிய பயணம் ( தன்முனைக் கவிதைகள் ) எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. இந்நூலுக்கு அணிந்துரை முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம். 300 தன்முனை கவிதைகள் கொண்ட இத்தொகுப்பில் ஒரு கவிதை.

உழைத்தால் வருவது சோர்வு
உழைக்காமல் வருவது தாழ்வு
செதுக்காமல் இல்லை  சிலை
செயலால் உயரும் உன் நிலை 



கருத்துகள்

  1. தமிழில் இதுவரை தன்முனைக் கவிதை தொகுப்பு நூல் 24 நான்கு வெளிவந்ததுள்ளது தெலுங்கில் நானினு வடிவம் இங்கே தன் முனையாக வெளிவர முயன்று வருகிறோம் கவிதை நான்கு வரிகள் வரவேண்டும்
    முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்து முற்றுப்பெற்றும் அடுத்த இரண்டு வரிகளில் எதிர்கருத்தையோ நேர்மறையான கருத்தையே தாங்கி வரலாம்.


    இந்நூல் தேவைப்படுவோர்

    9865209360 அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


    தம்பி அண்டனூர் சுராவின் பணி சிறக்க வாழ்த்துகள்..




    கவிதை உலகில் பன்மொழி வடிவங்கள் தமிழ் மொழியில் தமிழ் வடிவம் பெற இக்கவிதை உங்கள் உள்ளங்களோடும் உணர்வோடும் உறவாடும் வாசியுங்கள் உறவுகளே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...